Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒரு நாள் போட்டி; இந்தியா அபார தொடக்கம்: இலங்கையை பழி தீர்க்குமா?

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (13:05 IST)
இந்தியா வந்துள்ள இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வியை அடைந்தது.
 
இந்நிலையில் வெற்றியை தக்கவைக்க கூடிய முக்கிய போட்டியான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று காலை 11.30 மணியளவில் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் ஷர்மா, தவான் ஜோடி அருமையான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 115 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. தவான் 67 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ரோகித் ஷர்மா 47 ரன்கள் அடித்து தொடர்ந்து பொறுப்பாக ஆடி வருகிறார். இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
 
சிறப்பான தொடக்கம் அமைந்ததுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி பெரிய இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments