Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமார் & வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த இந்தியா.. !

vinoth
சனி, 28 டிசம்பர் 2024 (08:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி நேற்று 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 82 ரன்களும் கோலி 36 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். அதையடுத்து இன்று போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிஷப்  பண்ட் மற்றும் ஜடேஜா தங்கள் விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர்.

அதிரடியாக ஆடிய நிதீஷ்குமார் அரைசதம் அடித்தார். இந்தியா தற்போது 7 விக்கெட்களை இழந்து 275 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments