டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு! அணியில் யார் யாருக்கு இடம்?

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:36 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில் பல மூத்த வீரர்கள் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் சற்று முன்னர் மொஹாலி மைதானத்தில் இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(w/c), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி

ஆஸ்திரேலிய அணி
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷான், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ்(w), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ்(c), சீன் அபோட், ஆடம் ஜாம்பா 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments