Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா மேட்ச்! – மழை வர வாய்ப்பு?

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:17 IST)
சென்னையில் இன்று உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் மழை பெய்யுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.



ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் 9 மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளின் நான்காவது போட்டியான இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போட்டி நடைபெறும் இன்றும் சென்னையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதும் மழையின் குறுக்கீட்டால் சுவாரசியமான பல மேட்சுகள் சொதப்பலாகி போனது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் மழை குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments