இந்தியா – பாகிஸ்தான் போட்டி; மழை பெய்தாலும் போட்டி உண்டு!? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விதிவிலக்கு!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:05 IST)
ஆசியக்கோப்பை போட்டிகளில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆசியக்கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதன் தகுதி சுற்று ஆட்டங்களில் முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியுடன் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பிரித்து அளிக்கப்பட்டன. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் 4 தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த போட்டிகளில் வரும் 10ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. ஆனால் அன்றைய தினத்தில் அந்த பகுதியில் 90% மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டியும் முழுதாக நடக்காதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விதிவிலக்கு அறிவித்துள்ளது. ஒருவேளை அன்றைய தினம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கு இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments