Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்கி ஆர்தரின் விமர்சனத்துக்கு ஐசிசி அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:43 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய  உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில்  உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின்னர், இன்றைய போட்டி பற்றி பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் “இது ஐசிசி நடத்திய போட்டிபோல் இல்லை. பிசிசிஐ நடத்திய போட்டிபோல் இருந்தது.  மைதானத்தில் பாகிஸ்தானுகு ஆதரவான எந்த கோஷமும் அடிக்கடி வரவில்லை. நான் இதை காரணமாக கூறவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி இப்போது ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே விளக்கம் அளித்துள்ளார். அதில் “நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்வுக்கும் பல தரப்பில் இருந்து விமர்சனம் வரும். தற்போது உலகக் கோப்பை தொடர் தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது.  என்னென்ன மாற்றம் செய்யலாம், எதனை மேம்படுத்தலாம் என்பதை மதிப்பாய்வு செய்வோம். முடியும் போது இது ஒரு சிறப்பான உலகக் கோப்பை தொடராக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments