Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் ஆட்டத்தை மறக்க முடியாது - ரோஹித் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் ஆட்டத்தை மறக்க முடியாது - ரோஹித் சர்மா
, திங்கள், 9 பிப்ரவரி 2015 (13:23 IST)
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் ஆட்டத்தை மறக்க முடியாது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
 
தற்போது நடைபெற உள்ள உலக கோப்பையில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 15ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை ஒருமுறைகூட பாகிஸ்தான் அணி வென்றதில்லை.
 

 
இந்நிலையில் இந்திய அணியின் வீரர் ரோஹித்சர்மா கூறும்போது, “உலகக் கோப்பையில் எல்லா ஆட்டங்களிலும் முக்கியம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போதுமே மிகப்பெரியது. உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பதால் எங்களை விட அவர்களுக்குதான் நெருக்கடி அதிகமாக இருக்கும்.
 
ஆனாலும் அதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆலன் பார்டரின் கேட்சை அஜய் ஜடேஜா பிடித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
 
இதுபோல் 2003ஆம் ஆண்டு செஞ்சுரியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெண்டுல்கரின் ஆட்டத்தில் மறக்க முடியாது. அந்த போட்டியில் அனல் பறந்தது. அந்த போட்டியில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக இருந்தது. போட்டி முடியும் வரை டி.வி.யில் இருந்து என் பார்வை எங்குமே செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil