Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு குறித்த கேள்வி: திகைத்து போன மிதாலி ராஜ்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (15:08 IST)
எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவை என இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி. 

 
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோற்றது. இதனால் அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி கனவாகவே போனது. 
 
இதனைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 
எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் திட்டமிடவில்லை. எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவை. எனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க இது சரியான நேரமாக இருக்காது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments