Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’வெற்றியை விட தோல்வியைத்தான் அதிகம் அனுபவித்துள்ளேன்’ - ஷிகர் தவான் வருத்தம்

’வெற்றியை விட தோல்வியைத்தான் அதிகம் அனுபவித்துள்ளேன்’ - ஷிகர் தவான் வருத்தம்
, புதன், 27 மே 2015 (16:56 IST)
நான் வெற்றியை விட தோல்வியைத்தான் அதிகம் அனுபவித்து உள்ளேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “தற்பொழுது நான் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக பார்க்கப்படுகிறேன். ஆனால் உண்மையிலேயே, வெற்றியை விட தோல்வியைத்தான் நான் அதிகம் பெற்றிருந்தேன். நீங்கள் அதிக கஷ்டங்களை சந்திக்கும் போதுதான், வலிமையாக கட்டப்படுகிறோம். எனக்கும் இதிலிருந்து வேறுபாடு கிடையாது.
 
நான் 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், வெறும் 8 சதங்களை மட்டுமே எடுத்துள்ளேன். நிறைய நண்பர்கள் தங்களது ஃபார்ம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நானோ, நிலையான மற்றும் பொறுமையாக செயல்படுவது குறித்து சிந்தித்து வந்தேன்” என்றார்.
 
மேலும், அவர் சர்வதேசப் போட்டிகளின் அடியெடுத்து வைப்பதற்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய சமாளிக்கும் திறமைதான், தவிர்க்க முடியாத தோல்விகளிலிருந்து வெளியேற உதவியதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil