Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பையில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால், ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் - யுவராஜ் சிங் உருக்கம்

உலகக் கோப்பையில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால், ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் - யுவராஜ் சிங் உருக்கம்
, புதன், 29 அக்டோபர் 2014 (18:07 IST)
2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால், ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உலகக் கோப்பை விளையாட்டில் எனக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் அல்லது  கிடைக்காமலும் போகலாம். வாய்ப்புக் கிடைத்தால் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. வாய்ப்புக் கிடைக்காவிட்டால் எனது வாழ்க்கையை நோக்கிச் சென்று விடுவேன்" என்று கூறியுள்ளார்.
 
மேலும், வாய்ப்பை இழந்தால் தனக்கு அது வருத்தத்தை தரும் என்றும், அதனை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில், யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil