Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படியே போனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் மறைந்துவிடும் - வக்கார் யூனிஸ் கவலை

இப்படியே போனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் மறைந்துவிடும் - வக்கார் யூனிஸ் கவலை
, வியாழன், 26 மார்ச் 2015 (12:28 IST)
இப்படியே தொடர்ந்து போனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் மறைந்துவிடும் என்று முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “சர்வதேச போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் நமது கிரிக்கெட் மறைந்துவிடும் என நான் நினைக்கிறேன்.
 
ஜூனியர் அளவிலான நமது வீரர்களின் திறமை மங்கி, பிறகு வெளியில் பிரகாசிக்காமல் அழிந்ந்து போய் விடும். சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் பாகிஸ்தானுக்குக் கொண்டு வர முயல வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும் உதவ முன்வர வேண்டும்.
 
பாகிஸ்தானில் கிரிக்கெட்டை நாம் காப்பாற்றியாக வேண்டுமெனில், நாம் உள்நாட்டுப் போட்டிகளை உயர்த்த வேண்டும். எனெனில் அதற்கும் உலக கோப்பை தரத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நாம் மற்ற அணிகளின் பின்னால் தான் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil