Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்தி ஷர்மாவைத் தாக்கும் இங்கிலாந்து ஊடகங்கள்… ஹர்ஷா போக்லே கோபம்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (08:38 IST)
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா குறித்து இங்கிலாந்து ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா- இங்கிலாந்து தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சாராவை மான்கட் முறையில் அவுட் ஆக்கினார். இந்த விக்கெட்டால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மான்கட் முறை கிரிக்கெட் விதிகளின் படி சரி என்றாலும், விரைவில் அதை ஐசிசி ரன் அவுட் வகையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்க உள்ள நிலையிலும் இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் தீப்தி ஷர்மாவை கடுமையான தொடர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “இங்கிலாந்து வீரர்கள் இன்னும் தங்கள் காலணிய பார்வையில் இருக்கிறார்கள் போல. ஆனால் இங்கிலாந்து சிந்திப்பதை போலவே உலகின் மற்ற நாடுகளும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. விதிகளின் படி செயல்பட்ட ஒரு வீராங்கனையிடம் இவ்வளவு கேள்விகள் கேட்பது நியாயமில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments