Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா!

கிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (16:53 IST)
இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளரில் ஒருவரின் உதட்டில் பட்டு அவரது உதடு கிழிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


 
 
தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்கள் பட்டாளத்தோடு புது ரத்தம் பாய்ச்சியது போன்று வீரம் நிறைந்ததாக காணப்படுகிறது. அதில் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
 
இவரை போன்ற ஒரு ஆல்ரவுண்டரை தான் இந்தியா இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தது. எதிர்கால இந்தியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் மழை பொழிவதிலும், பெரிய ஷாட்களை அடிப்பதிலும் வெறியாக உள்ளார்.
 
இவர் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியின் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜம்பா பந்தில் சிஸ்சர் விளாசினார். அந்த பந்து நேராக மைதானத்தில் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, டோசிட் அகர்வால் என்ற ரசிகரின் உதட்டைப் பதம் பார்த்தது.
 
இதனையடுத்து அவருக்கு ரத்தம் கொட்டியதால் மைதானத்தின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில தையல்கள் போடப்பட்டது. பாண்டியா அடித்த பந்து, தன்னை நோக்கி வந்தது, அது முகத்தில் பட்டுவிடாமல் இருக்க சற்று ஒதுங்கினேன் ஆனால் பந்து வேகமாக வந்து உதட்டில் பட்டு கிழித்துவிட்டது என அந்த நபர் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்கள் விளாசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments