Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாட்ச்கள் 5 கோடி ரூபாய் அல்ல! அந்த தகவல் பொய்! - ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:14 IST)
மும்பை விமான நிலையத்தில் பறிமுதலான தனது வாட்ச்கள் 5 கோடி ரூபாய் மதிப்புடையது அல்ல என்று ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் முடிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் துபாய் சென்றிருந்த ஹர்திக் பாண்ட்யா விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தார்.

மும்பை வந்த ஹர்திக் பாண்ட்யாவிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை ஹர்திக் பாண்ட்யா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, தன்னிடமிருந்து பெறப்பட்ட வாட்ச்கள் ரூ.5 கோடி மதிப்புடையவை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அவை 1.5 கோடி ரூபாய் மதிப்புடையவை. மேலும் உரிய ஆவணங்களை சுங்க அதிகாரிகளிடம் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments