Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (15:04 IST)
22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் Great Rivalry போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளார். கடந்த சீசனில் மூன்று போட்டிகளில் மெதுவான வேகத்தில் பந்து வீசியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹர்திக்கை கத்தி கூச்சலிட்டு கேலி செய்தனர். இந்நிலையில் “இந்த முறை நான் டாஸ் போட வரும் போதும், பேட் செய்யும் போதும், சிக்ஸ் அடிக்கும் போதும் என்னை உற்சாகப் படுத்துங்கள். அதுதான் நான் மும்பை ரசிகர்களிடம் வேண்டுவது. மைதானத்தில் மும்பை ஜெர்ஸியைத் தவிர நான் வேறு எதையும் பார்க்கக் கூடாது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments