Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:10 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இந்த சீசனில் அந்த அணி ப்ளே ஆஃப் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக அந்தணியின் முன்னாள் வீரர்களே விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் சி எஸ் கே அணிக்காக சில சீசன்கள் விளையாடிய ஹர்பஜன் சிங் அந்த அணியில் தன்னுடைய சக வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா பற்றி பேசியுள்ள கருத்துக் கவனம் பெற்றுள்ளது. அதில் “சுரேஷ் ரெய்னா எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்டார். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அவர் 15 ஆண்டுகள் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால் சி எஸ் கே நிர்வாகம் அவருக்குக் கைகொடுக்கவில்லை” என வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

சி எஸ் கே அணிக்கும் ரெய்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் வெகு சீக்கிரமாகவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments