Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சான்ஸே இல்லாத ஒரு இன்னிங்ஸை ஆடியதில் மகிழ்ச்சி… மேக்ஸ்வெல் பேச்சு!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:53 IST)
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி ஆஸி அணியை வெற்றிப்பெற வைத்தார்.

போட்டி முடிந்ததும் பேசிய மேக்ஸ்வெல் “இன்று ஃபீல்டிங் செய்யும் போது வெப்பம் அதிகமாக இருந்தது, வெப்பத்தினால் அதிகம் உடற்பயிற்சி செய்யவில்லை. பாசிட்டிவ்வான எண்ணத்தில் இருந்தேன்.  அதே போல எனது வழக்கமான ஷாட்களை விளையாட விரும்பினேன். ஆப்கன் பவுலர்கள் அழகாக பந்து வீசினர். எங்கள் அணி எப்போதும் நம்பிக்கையானது. இந்த போட்டியின் மூலம் மேலும் அந்த நம்பிக்கை அதிகமாகியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments