Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் கம்பீர் இருக்கமாட்டார்… ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:37 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில்  சமீபத்தில் வெளியான தகவலின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் பணிகள் காரணமாக கம்பீர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த பொறுப்பிலும் இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments