Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக் கோப்பையில் இவர்களதான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும்- கங்குலி ஆசை!

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (07:16 IST)
கடந்த 2021 ஆம்  ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன.

மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக மூன்று வடிவ போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக கங்குலி கோலிக்கு ஆதரவாக பேசி வருகிறார். விரைவில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை குறித்து பேசியுள்ள அவர் “உலகக் கோப்பை தொடரில் ரோஹித்தும் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அவர்கள் எந்த பயமும் இல்லாமல் பவர்ப்ளே ஓவர்களை அடித்து ஆடவேண்டும். அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் சதமடிக்கும் திறமை கோலியிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments