Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இருக்க பயமேன்: கங்குலி பெருமிதம்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (12:49 IST)
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுபயணத்திலும் சிறப்பாக செயல்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
 
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றாலும், ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
 
இந்நிலையில் இந்திய அணி, இந்த ஆண்டு அஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
 
இந்த சுற்றுப்பயணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கூறியதாவது:-  
 
கோலி தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்படும். கோஹ்லியின் பேட்டிங் திறன் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு மண்ணில், அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். 
 
வேகத்தில் மிரட்டும் பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரும் வெளிநாட்டு மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற பெரும் பங்கு வகிப்பார்கள். கோலி பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் வென்றது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments