Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு நான் நோட்டீஸ் அனுப்பினேனா? கங்குலி விளக்கம்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி குறுகிய காலத்தில் விலகியதும் விலக்கப்பட்டதும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இது சம்மந்தமாக பிசிசிஐ தலைவர் கங்குலி கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை கங்குலி இப்போது மறுத்துள்ளார். இது பற்றி விளக்கம் அளித்துள்ள கங்குலி ‘நான் கோலிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்தி உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments