Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு நான் நோட்டீஸ் அனுப்பினேனா? கங்குலி விளக்கம்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி குறுகிய காலத்தில் விலகியதும் விலக்கப்பட்டதும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இது சம்மந்தமாக பிசிசிஐ தலைவர் கங்குலி கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை கங்குலி இப்போது மறுத்துள்ளார். இது பற்றி விளக்கம் அளித்துள்ள கங்குலி ‘நான் கோலிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்தி உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments