Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவோடு பகல் – இரவு ஆட்டம்: கங்குலி தகவல்!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:54 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் பகல் – இரவாக நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தாலும் பகல் – இரவு ஆட்டங்களில் விளையாடுவதை தவிர்த்தே வந்தன. ஸ்டேடிய விளக்குகளின் வெளிச்சத்தில் பிங்க் பந்தில் விளையாடுவது இந்திய அணிக்கு ஆகாத காரியமாக இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவியேற்ற கங்குலி முதன்முறையாக வங்கதேசத்துடனான ஆட்டத்தின் போது பகல் – இரவு ஆட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்திய அணி விளையாடிய முதல் பகல் – இரவு போட்டியான அதில் வங்க தேசத்தை வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா. இதை தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் ஒரு ஆட்டமாவது பகல் – இரவாக நடத்த முயற்சிகள் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க இருக்கு தொடரில் ஒரு ஆட்டத்தை பகல் –இரவாக ஆடுவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

பிங்க் பந்து இந்தியாவுக்கு புதிது என்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு அது பழக்கமானது. இதுவரை ஆஸ்திரேலிய விளையாடிய 7 பிங்க் பந்து ஆட்டங்களில் முழுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பகல் – இரவு ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments