Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் சூதாட்ட விசாரணைக் குழுவில் கங்குலி

ஐபிஎல் சூதாட்ட விசாரணைக் குழுவில் கங்குலி

Ilavarasan

, திங்கள், 9 ஜூன் 2014 (15:48 IST)
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்த விசாரணை குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி இணைந்துள்ளார். 
 
6வது ஐபிஎல் சூதாட்ட விவகாரம் காரணமாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் முழுமையாக விசாரணை நடத்தி 4 மாதத்துக்குள் இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த குழு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை குழு கூட்டத்தில் சவுரவ் கங்குலியும் இந்த விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து முகுல் முட்கல் கூறுகையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணை குழுவில் எங்களுடன் இணைந்து செயற்படும்படி கங்குலிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

நான் கங்குலியியை தொடர்பு கொண்டு பேசிய போது எங்களுடன் சேர்ந்து செயற்பட அவர் சம்மதம் தெரிவித்தார். நாங்கள் அடுத்து சந்தித்து பேசும் நாள் எது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த கூட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil