Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலியின் கிரிக்கெட் பயணத்தை அழிக்க நினைத்தவர்... விவரம் உள்ளே...

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (12:15 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி Eleven Gods And A Billion Indians என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஐபிஎல் போட்டியின் போது வெளியிட உள்ளார். 
 
இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட்டை பற்றியும், இந்திய அணிக்கு கிரேக் சேப்பல் பயிற்சியாளராக பதவியேற்றதும், இந்திய அணியின் ஏற்பட்ட மாற்றங்களும் தனக்கு அணியில் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்களை பற்றியும் எழுதியுள்ளார். 
 
கிரேக் செப்பல் பற்றி அந்த புத்தகத்தில் கங்குலி எழுதியுள்ளது பின்வருமாறு, கடந்த 2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே தொடரின் போது கிரேக் என்னிடம் அணி வீரர்களின் பட்டியலை காட்டினார். அதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன், காரணம் அதில் அணியின் முக்கிய வீரர்கள் யாருமே இல்லை.
 
இந்திய கிரிக்கெட்டில் அவரது அணுகுமுறை வேறு விதமாக இருந்தது. ஆனால், அவை அனைத்தும் எதிர்வினை ஆற்றக்கூடியதாக எனக்கு தோன்றியது. இதனால் அவரது முடிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. 
 
அவர் இந்திய அணியை கிரேப் செப்பல் அணியாக மாற்ற நினைத்தார் என்பது புரிந்து கொண்டு சுதாரித்துக்கொண்டே. இல்லையேல் அப்பொழுதே எனது கிரிக்கெட் பயணம் முடிந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments