Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கோலிக்கு தொடர்நாயகன் விருது கொடுத்துட்டாங்க… கம்பீர் பரிந்துரைக்கும் மற்றொரு வீரர்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (15:14 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கோலிக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். அதில் “முகமது சிராஜ் இந்த தொடர் முழுவதும் சிராஜ் முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு தனியாக கொடுக்காவிட்டாலும், கோலியுடன் சேர்த்தாவது அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இது புரிந்து கொள்ள கூடியதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments