Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை கடந்து ரெய்னா அபாரம்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (15:09 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை கடந்து அசத்தியுள்ளார். 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ரெய்னா உத்திரபிரதேச மன்னின் சொந்தக்காரர் ஆவார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். தற்போது ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆண்டுகளை கடந்து அசத்தியுள்ளார்.
 
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா தோனியுடன் சேர்ந்து பல அறிய வெற்றிகளை பதிவு செய்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சிக்சர் மழைகளை ரசிகர்களுக்கு பொழிந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. 
 
மேலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன ரெய்னா டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பல இக்கட்டான சூழலில் இந்திய அணிக்காக விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
 
இதுவரை 218 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள ரெய்னா 5,500 ரன்களை சேகரித்துள்ளார். இவற்றில் 5 சதம், 35 அரை சதம் ஆகியவையும் அடங்கும். அனைத்து ரக கிரிக்கெட் ஆட்டங்களான டெஸ்ட், ஒரு நாள் மற்றும், டி20 கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா என்பது கூடுதல் சிறப்பு.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments