Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடருக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (07:29 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமனில் உள்ளது.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவிட அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவர்கள் அங்குள்ள மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் மீண்டும் இந்தியா வந்து சேர்வார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!

ஹர்திக் பாண்ட்யாவை நான் அதிகமாகவே திட்டிவிட்டேன்… ஒத்துக்கொண்ட முன்னாள் வீரர்!

ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments