Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.சி.சி.ஐ. தலைவராக ஷஷாங்க் மனோகர் ஒருமனதாக தேர்வு

பி.சி.சி.ஐ. தலைவராக ஷஷாங்க் மனோகர் ஒருமனதாக தேர்வு
, ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (14:31 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ஷஷாங்க் மனோகர்
போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 


 

 

 
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மாரடைப்பால் கொல்கத்தாவில் உள்ள பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ஜக்மோகன் டால்மியா  கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.ஜக்மோகனின் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவராக இருந்த  ஷஷாங்க் மனோகர் போட்டியின்றி ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil