Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவாரா? மழுப்பலான பதிலை சொன்ன டிராவிட்!

vinoth
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:55 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியானது.

கோலி, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதால் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏனென்றால் அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை அவர் பிசிசிஐ தரப்பை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாடுவாரா என்று அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட் “இதை நீங்கள் தேர்வுக்குழுவிடம்தான் கேட்கவேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் இன்னும் சில நாட்களில் இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவிக்க உள்ளார்கள். அப்போது கோலியிடம் பேசிவிட்டு இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments