Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் ஏன் விளையாடவில்லை என்று பாண்டிங் கேட்கிறார்- தினேஷ் கார்த்திக் பெருமிதம்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:19 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். விரைவில் இந்திய அணிக்காக அவர் மீண்டும் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நடராஜன் தான் சார்ந்துள்ள கிரிக்கெட்டுக்கு மைதானம் கட்டியுள்ளது பெரிய விஷயம். அதன் மூலம் அவர் சமுதாயத்தை முன்னேற செய்கிறார். சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை செலுத்தியுள்ளார் நடராஜன். அண்மையில் நான் மேத்யூ ஹெய்டன் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரிடம் பேசிய போது ஏன் நடராஜன் ஐபிஎல்-க்கு பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை என கேட்டனர். அந்த அளவுக்கு அவர் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments