Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரிஷப் பண்ட்டின் மீள்வருகை சாதாரணமானது இல்லை…” தினேஷ் கார்த்திக் பாராட்டு!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (07:55 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து இப்போது உலகக் கோப்பை தொடரில் தேர்வாகியுள்ள அவர் பயிற்சி ஆட்டத்திலும் முதல் போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் அவரது பேட்டிங் வரிசையும் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். அவர், “ஒரு மோசமான விபத்தில் இருந்து மீண்டுவருவது சாதாரணமானது இல்லை. சாதாரண தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலை அவரை விரக்தியடைய வைத்திருக்கும்.  அந்த நிலையைக் கடின உழைப்பாலும் மன வலிமையாலும் மீண்டு வந்துள்ளார். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியை வெல்ல உதவுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments