Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி & ரோஹித் ஷர்மா கண்டிப்பா தேவை… முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (08:25 IST)
டி 20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் பெற்ற மோசமான தோல்வி காரணமாக மூத்த வீரர்களை கழட்டிவிடும் முனைப்பில் பிசிசிஐ உள்ளது. அதன் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான திலீப் வெங்சர்க்கார் “இந்திய அணிக்காக இருவரும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இருவரும் இன்னும் சில காலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டியவர்கள். பிசிசிஐ இந்த விஷயத்தில் வீரர்களின் வயதைப் பார்க்காமல், பிட்னஸ் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை பார்க்கவேண்டும். கோலி, இரண்டிலும் இப்போது சிறப்பான நிலையில் உள்ளார். அதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments