Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி & ரோஹித் ஷர்மா கண்டிப்பா தேவை… முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (08:25 IST)
டி 20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் பெற்ற மோசமான தோல்வி காரணமாக மூத்த வீரர்களை கழட்டிவிடும் முனைப்பில் பிசிசிஐ உள்ளது. அதன் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான திலீப் வெங்சர்க்கார் “இந்திய அணிக்காக இருவரும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இருவரும் இன்னும் சில காலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டியவர்கள். பிசிசிஐ இந்த விஷயத்தில் வீரர்களின் வயதைப் பார்க்காமல், பிட்னஸ் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை பார்க்கவேண்டும். கோலி, இரண்டிலும் இப்போது சிறப்பான நிலையில் உள்ளார். அதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Worldcup T20 IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு! ப்ளேயிங் 11ல் யார் யார்?

டி 20 போட்டிகளில் மிகக்குறைந்த ஸ்கோர்… நெதர்லாந்தின் மோசமான சாதனையை சமன் செய்த உகாண்டா!

உலகக் கோப்பை தொடரின் முதல் 200+ ஸ்கோர்… இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு மரண பயத்தைக் காட்டிய நெதர்லாந்து… ஜஸ்ட் எஸ்கேப்!

கோலி ஆபத்தானவர்தான்… ஆனால் இந்த விஷயத்தை மட்டும் சரிசெய்ய வெண்டும்- முன்னாள் வீரர் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments