Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஏக்கரில் தோனியின் பிரம்மாண்ட பங்களா: என்னென்ன வசதிகள் தெரியுமா?

7 ஏக்கரில் தோனியின் பிரம்மாண்ட பங்களா: என்னென்ன வசதிகள் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (12:51 IST)
இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி நவீன வசதிகள் கொண்ட புதிய பங்களா ஒன்றை 7 ஏக்கர் பரப்பளவில் வாங்கியுள்ளார்.


 
 
நடுத்தர குடும்பத்தில் பிறந்த தோனி ராஞ்சியில் தொரந்தா பகுதியில் ஒரு சாதாரணமான வீட்டில் வசித்து வந்தார். பின்னாளில் பிரபலமான கிரிக்கெட் வீரராக தோனி உருவெடுத்த பின்னர், மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் குடிபெயர்ந்தார்.
 
தனது மனைவி சாக்‌ஷி, மகள், அப்பா, அம்மாவுடன் வசித்து வந்த தோனி தற்போது ராஞ்சி ரிங் ரோடு பகுதியில் கைலாஷ்பதி என்ற புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புதிய பங்களா ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
 
7 ஏக்கரில் ஒரு பங்களாவா, இவ்வளவு பெரிய பங்களாவில் அப்படி என்ன இருக்கிறது பலரும் மலைத்துப்போய் பார்த்தனர். தோனியின் இந்த 7 ஏக்கர் பங்களாவில், உள்ளரங்க மைதானம், வலைப்பயிற்சி செய்யும் இடம், நீச்சல் குளம், நவீனமயமான உடற்பயிற்சி மையம் என பல்வேறு நவீன வசதிகள் இங்கு உள்ளது.
 
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தோனியின் குடும்பம் இந்த புதிய பங்களாவுக்கு குடிபெயர்ந்தது. தோனி ஐபில் போட்டியில் விளையாடி வருவதால் கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் சில மணி நேரங்கள் தனது குடும்பத்துடன் செலவிட்ட தோனி மீண்டும் புனே அணியுடன் இணைந்துகொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments