Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுவராஜ் சிங் உலகக்கோப்பையில் இடம் பெறாததற்கு தோனியே காரணம் - யுவராஜ் சிங்கின் தந்தை

யுவராஜ் சிங் உலகக்கோப்பையில் இடம் பெறாததற்கு தோனியே காரணம் - யுவராஜ் சிங்கின் தந்தை
, திங்கள், 16 பிப்ரவரி 2015 (18:23 IST)
யுவராஜ் சிங் உலகக்கோப்பையில் இடம் பெறாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

 
இது குறித்து கூறிய யோக்ராஜ் சிங், “யுவராஜ் மீதான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே தோனி அணியில் சேர்த்து கொள்ளவில்லை. நான் எதையும் செய்யமுடியாது. கடவுள் நீதி வழங்குவார். இந்திய அணி கேப்டன் டோனி தலைமையில் உலக கோப்பையை வெல்ல பிரார்த்திப்போம். ஆனாலும், அவர் இந்த வழியில் செயல்பட்டது குறித்து வருத்தமடையாமல் இருக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
 
webdunia

 
ஆனால், இதற்கு யுவராஜ் சிங் தனது ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். யுவி தனது ட்விட்டரில், “ஒவ்வொரு பெற்றோரையும் போல என் தந்தையும் உணர்ச்சிவசப்படுகிறார். நான் நிச்சயமாக எல்லாவற்றையும் மறந்து, மகிழ்ச்சியுடன் மகேந்திர சிங் தோனி தலைமையில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன், எதிர்காலத்திலும் அவ்வாறே நடந்து கொள்வேன்” என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
 
யுவராஜ் சிங் மட்டுமல்லாமல் கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் போன்ற மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil