ரெய்னா கேப்டன்சியில் தோனி விளையாடிய மேட்ச் ஞாபகம் இருக்கா?

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (16:53 IST)
சமீபத்தில் சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு சி எஸ்கேவில் ஜடேஜா தலைமையில் ஒரு வீரராக தோனி களமிறங்க உள்ளார். இதற்கு முன் சி எஸ் கே வில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார். 2012 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் ஒரே ரெய்னா தலைமையில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. இன்று ஆர்சிபி செய்யவிருக்கும் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்..!

ஏலத்தில் விலைபோகாத வீரரை ரூ.2 கோடிக்கு எடுத்த சன்ரைசர்ஸ் அணி.. நாளை விளையாடுவாரா?

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்.. தோல்வி அடைந்த கொல்கத்தாவுக்கு கடைசி இடம்..!

வினோத் காம்ப்ளிக்கு என்ன ஆச்சு? மனைவி ஆண்ட்ரியா கூறிய விளக்கம்..!

சொந்த மைதானத்தில் மும்பை தோல்வி.. பந்தாடிய பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments