Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்: மூத்த வீரர்களுக்கு ஓய்வு?

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (11:00 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு தரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
 
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களான தோனி, கோலி, அஸ்வின் ஆகியோருக்கு சற்று ஓய்வு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அணியை வழிநடத்தும் கேப்டன் பதிவு ரோகித் சர்மா அல்லது ரெய்னாவிற்கு கிட்டும் என தெரிகிறது. மேலும் உள்ளூர் போட்டிகளில் உத்தப்பா அசத்தியுள்ளதால் அணியில் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, அம்பத்தி ராயுடு, மொகித் ஷர்மா ஆகிய வீரர்கள் அணியில் வழக்கம் போல் செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

Show comments