Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை - தோனி குற்றச்சாட்டு

பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை - தோனி குற்றச்சாட்டு
, வியாழன், 9 அக்டோபர் 2014 (13:26 IST)
இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம் என்று தோனி குற்றச்சாட்டியுள்ளார்.
 
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நேற்று (08.09.14) புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை என தோனி குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
இந்த போட்டிக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, "பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இலக்கை எட்ட முடியாதது வருத்தமளிக்கிறது. ஆனாலும பந்து வீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசியதால் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil