Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிகட்ட பந்துவீச்சு கவலை அளிக்கிறது: தோனி வேதனை

இறுதிகட்ட பந்துவீச்சு கவலை அளிக்கிறது: தோனி வேதனை
, புதன், 8 அக்டோபர் 2014 (14:20 IST)
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் நடக்கிறது. 
 
இப்போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், இந்திய அணியில் இறுதிகட்ட பந்துவீச்சு சற்று கவலை அளிக்கிறது. எனினும் இறுதிகட்ட நேரத்தில் அதிகப்படியான யார்க்கர்களை வீசுவது மிகவும் முக்கியம்.
 
வரவிருக்கும் உலக கோப்பைக்கு முன் வேகப்பந்து வீச்சில் எழுச்சி காண்பது மிகவும் அவசியமானது. மேலும் வேகப்பந்து வீரர்கள் தங்கள் முழுதிறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
சர்ச்சைக்குரிய வகையில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவது சரியான முடிவே ஆகும். மேலும், எந்த ஒரு பந்துவீச்சாளரும் மற்ற பந்து வீச்சாளர்களை விட கூடுதல் ஆதாயம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இருப்பினும், சந்தேகம் அளிக்கும் வகையில் பந்துவீசும் வீரர்களை கிரிக்கெட்டில் இருந்து அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியமானது என தோனி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil