Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ஷிகர் தவான் ’” திடீர் “ விலகல்

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ஷிகர் தவான் ’” திடீர் “ விலகல்
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (09:43 IST)
காயம் காரணமாக ஷிகர் தவான் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் இலங்கை டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இவ்விரு அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகிற 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் டெஸ்ட் தொடரில் திடீர் திருப்பமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
 
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், காயம் காரணமாக இனி வரும் இலங்கை டெஸ்ட் தொடரில் ஷிகர் தவான் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு சற்று பாதகமான விஷயம் ஆகும். ஏற்கனவே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யும் முழு உடல் தகுதியை எட்டாவிட்டால் இந்திய அணியின் நிலை என்னவோ........

Share this Story:

Follow Webdunia tamil