Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி விலகல்

இந்திய தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி விலகல்
, வெள்ளி, 17 அக்டோபர் 2014 (18:34 IST)
மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஊதிய ஒப்பந்தம் குறித்த பிரச்சனையால் தொடரில் இருந்து விலக, வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த சமயத்தில் வீரர்களுடனான ஒப்பந்தத்தில், ஏற்கனவே இருந்த ஊதியத் தொகையிலிருந்து குறைக்கும் நடவடிக்கையில் அணி நிர்வாகம் இறங்கியது. ஆனாலும் தொடரில் பங்கேற்பது குறித்து அணி நிர்வாகம் உறுதியளித்தது.
 
ஆனால் தற்போது, மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகக் கூறி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தொடர் இன்றைய போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.
 
இது குறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறும்போது, “மேற்கிந்திய அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது. இது பற்றி அந்த அணியின் நிர்வாகி ரிச்சி ரிச்சர்ட்சனிடமிருந்து மின்னஞ்சல் வரப்பெற்றோம்” என்றார்.
 
மேலும், இது போன்று தொடரைப் பாதியிலேயே நிறுத்துவதால் ஏற்படும் இழப்பீடு மற்றும் ஏனைய விஷயங்கள் குறித்து ஐசிசி-யிடம் முறையீடு செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Share this Story:

Follow Webdunia tamil