Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேவிட் மில்லர் அடித்த பந்தில் பார்வையிழந்த காவல்துறை அதிகாரி

டேவிட் மில்லர் அடித்த பந்தில் பார்வையிழந்த காவல்துறை அதிகாரி
, வியாழன், 14 மே 2015 (17:13 IST)
ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்கியதில் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் கண் பார்வை பறிபோனது.
 
ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த மே 9ஆம் தேதி கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 

 
அப்போது பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர் ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசிய பந்தை டேவிட் மில்லர் சிக்சருக்கு தூக்கி அடித்தார். அங்கே மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கண்ணை பந்து பதம் பார்த்தது. பந்து தாக்கியதில் அவரது வலது கண்ணில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  
 
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கண்பார்வை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவர் காவல்துறை இணை ஆணையரின் ஓட்டுராக பணி செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil