Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:58 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எப்படியோ இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று, கோப்பையை இழந்தது. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா “கோலியின் தலைமையில் இந்தியா, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்ததும், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அணிக்கு தேவையான இடத்தில் விளையாடி கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால் பாபர் அசாம், அணிக்காக தனது இடத்தை மாற்றிக்கொண்டு நடுவரிசையில் இறங்க மறுக்கிறார். ஏனென்றால் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாட தெரியாது. அவருடைய பிடிவாதம் அணிக்கு ஆபத்தாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments