Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:58 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எப்படியோ இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று, கோப்பையை இழந்தது. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா “கோலியின் தலைமையில் இந்தியா, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்ததும், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அணிக்கு தேவையான இடத்தில் விளையாடி கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால் பாபர் அசாம், அணிக்காக தனது இடத்தை மாற்றிக்கொண்டு நடுவரிசையில் இறங்க மறுக்கிறார். ஏனென்றால் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாட தெரியாது. அவருடைய பிடிவாதம் அணிக்கு ஆபத்தாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments