Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ரெய்னா… அப்படி என்ன செய்தார்?

Webdunia
திங்கள், 29 மே 2023 (07:26 IST)
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றவரை தோனிக்கு அடுத்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுரேஷ் ரெய்னாதான். அவரை சின்னத்தல என்றே ரசிகர்கள் போற்றி புகழ்ந்துவந்தனர். அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெகு சீக்கிரமாக ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. ஓய்வு பெற்றாலும் எப்போதும் சென்னை அணியின் செல்லப்பிள்ளையாகவே அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் மீது சி எஸ் கே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட ஐபிஎல் அணியை அவர் அறிவித்திருந்தார். அதில் அவர் தோனிக்கு அவர் இடமளிக்கவில்லை. அதனால்தான் இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரெய்னா அறிவித்த ஐபிஎல் 2023-ன் சிறந்த அணி
ஹர்திக் பாண்டியா ( கேப்டன்), ஜெய்ஷ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரான் ( விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், சாஹல்
கூடுதல் வீரர்கள்  
கேமிரான் கிரீன், யாஷ் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், பதிராணா, ஜித்தேஷ் சர்மா 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments