Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா!

ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா!
, திங்கள், 8 பிப்ரவரி 2016 (19:12 IST)
இந்தியாவின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநில அரசுக்கு ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.


 
 
உத்தர பிரதேச அரசு சர்பில் ‘யாஷ் பாரதி’ என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, கலை, இலக்கியம், பாரம்பரிய இசை மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த விருதை இதுவரை பெற்றுள்ளோருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.50000 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. ‘யாஷ் பாரதி, என்ற இந்த விருதை இதுவரை 141 பேர் பெற்றுள்ளனர். இதன்படி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை மாநில அரசு அனுப்பி வைத்தது.
 
இந்து ஓய்வூதியத்துக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா மட்டுமில்லாமல், முன்னாள் வீரர் முகமது கைஃப், பிரபல பாடகர் சுபா முக்தல், ராஜன் மிஸ்ரா, ஷாஜன் மிஸ்ரா உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil