Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நிருபரிடம் ஏடாகூடம்: கெயிலுக்கு அபராதம்

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2016 (14:58 IST)
பிகபாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டின் போது நேற்று பெண் நிருபரிடம் ஏடாகூடமாக பேசிய கிரிஸ் கெயிலுக்கு அவர் ஆடும் மெல்போர்ன் அணி அவருக்கு 7 ஆயிரம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மெல்போர்ன் அணிக்காக விளையாடும் கிரிஸ் கெயில் டாஸ்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.
 
கெயில் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சி பெண் நிருபருக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது பெண் நிருபரை பார்த்து உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார், மேலும் ``நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்'' என்றார்.
 
பெண் நிருபரிடம் கெயிலின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கு இங்கிலாந்தின் முன்னாள் ஆண்ட்ரூ பிளிண்டாப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தான் விளையாட்டாகத்தான் அப்படி சொன்னதாக கூறி கெயில் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் அவர் விளையாடும் மெல்போர்ன் அணி இன்று அவருக்கு 7 ஆயிரம் டாலர்கள் அபராதமாக வித்துள்ளது.

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

Show comments