Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1001 சிக்ஸர்கள் அடிச்சிருந்தாலும்.. உங்களை ஏமாத்திட்டேன்! – ரசிகர்களிடம் க்ரிஸ் கெயில் உருக்கம்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (08:40 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடிய க்ரிஸ் கெயில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருந்தாலும் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் மோசமான தோல்விகளை கண்டு வந்த கிங்ஸ் லெவன் அணி, யுனிவர்சல் பாஸ் க்ரிஸ் கெயிலின் வருகைக்கு பிறகு தாறுமாறான வெற்றிகளை ஈட்ட தொடங்கியது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர்களை விளாசிய கெயில் ஐபிஎல் வரலாற்றிலேயே 1000 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

99 ரன்கள் அடித்திருந்த நிலையில் சதம் அடிக்க வேண்டிய பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார் கெயில். இது கெயில் ரசிகர்களுக்கு சிறிய அளவில் வருத்தத்தை தந்தாலும் 1001 சிக்ஸர்களை விளாசியதை பெருமையாக கருதுகிறார்கள்

இதுகுறித்து பேசியுள்ள கெயில் “1000 சிக்ஸர்கள் அடித்தது நல்ல ரெக்கார்டாக உள்ளது. 41 வயதிலும் பவர் ஹிட் அடிப்பது நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதேசமயம் நான் சதம் அடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 99 ரன்களின் அவுட் ஆனதில் வருத்தம்தான். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னை பொறுத்த அளவில் அதை சதமாகதான் நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments