Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிம்பாப்வே மிரட்டல்; சிகும்பரா அதிரடியால் 170 ரன்கள் குவிப்பு

ஜிம்பாப்வே மிரட்டல்; சிகும்பரா அதிரடியால் 170 ரன்கள் குவிப்பு
, சனி, 18 ஜூன் 2016 (18:37 IST)
இந்தியாவிற்கு எதிரான டி 20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது.
 

 
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சிபாபா மற்றும் மசகட்ஸா இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். பின்னர், சிபாபா 20 ரன்களிலும், மசகட்ஸா 25 ரன்களிலும் வெளியேறினர்.
 
அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா மற்றும் வால்லர் தங்களது பங்கிற்கு முறையே 20 மற்ற்றும் 30 ரன்கள் குவித்து வெளியேறினர். பின்னர், களமிறங்கிய சிகும்பரா இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 54 ரன்கள் குவித்தார்.
 
20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி  6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், அக்‌ஷர் பட்டேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வார்னேயின் சிறந்த உலக அணியில் ஒரே ஒரு இந்தியருக்கு மட்டுமே வாய்ப்பு!