Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தை சூழ்ந்த வெள்ள நீர்… விமானங்கள் ரத்து!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (09:30 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவர்த்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் புறப்பட இருந்த மற்றும் தரையிறங்க இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

அடுத்த கட்டுரையில்
Show comments