Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் – லாகூர் லயன்ஸ் ஆட்டம் மழையால் ரத்து

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் – லாகூர் லயன்ஸ் ஆட்டம் மழையால் ரத்து
, வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (09:37 IST)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லாகூர் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடக்கவிருந்த லீக் ஆட்டம் மழையால் ரத்தானது.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 
 
இந்நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் செப், 25 நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் – லாகூர் லயன்ஸ் அணிகளுக்கிடையே  20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடப்பதாக இருந்தது.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை கொட்ட தொடங்கியதால் டாஸ் கூட போட முடியாமல் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரைஇறுதியில் நுழைய, தனது கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil