Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் இருந்து இந்த விதியை நீக்கவேண்டும்… பென் ஸ்டோஸ் கருத்து!

vinoth
திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:43 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக மோசமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலரின் விக்கெட்கள் சர்ச்சைகள் கிளப்பின.

இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “கிரிக்கெட்டில் இருந்து அம்பயர்ஸ் கால் என்ற முறையை முழுவதும் நீக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை பந்து ஸ்டம்ப்பில் படுகிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.  இதைப் பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் தோல்வி பெற்றதால் புலம்புவதாக பலரும் நினைக்கலாம். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments